Tuesday, September 24, 2024

செவிலியர் சபீனாவுக்கு கல்பனா சாவ்லா விருது

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset

சபீனா ஜிப்லைன் மூலம் ஆற்றைக் கடந்து சென்று நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளித்தார்.

சென்னை,

வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களுக்கு தமிழகத்தின் கூடலூரைச் சேர்ந்த செவிலியர் சபீனா ஜிப்லைன் மூலம் ஆற்றைக் கடந்து சென்று சிகிச்சை அளித்தது குறித்த குறும்படம் ஒளிபரப்பப்பட்டது. செவிலியர் சபீனாவின் இந்த வீர செயலுக்காக அவருக்கு தொடர்ந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இந்நிலையில், தமிழக செவிலியர் சபினாவுக்கு, வீர திர செயலுக்கான கல்பனா சாவ்லா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

செவிலியர் சபீனாவுக்கு, விருதினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்க உள்ளார். வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு. தனது உயிரையும் பொருட்படுத்தாமல், துணிச்சலாக செயல்பட்டு சிகிச்சை அளித்தமைக்காக விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024