நெல்லை: கோவில் கொடை விழாவில் தகராறு- அண்ணன், தம்பி குத்திக் கொலை

by rajtamil
0 comment 17 views
A+A-
Reset

உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நெல்லை,

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள காரம்பாடு பகுதியில் கோவில் கொடை விழா நடைபெற்றது. இந்த கொடை விழாவில் இளைஞர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் அண்ணன், தம்பி இருவர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்த வந்து உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்த போலீசார் திருவிழாவில் ஏற்பட்ட தகராறு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் கொடை விழாவில் ஏற்பட்ட தகராறில் அண்ணன், தம்பி குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் திசையன்விளை பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024