Saturday, September 21, 2024

பெண் டாக்டர் கொலை: நீதி கிடைப்பதில் தாமதம் ஏற்படவே கூடாது – கிரிக்கெட் வீரர் அஸ்வின்

by rajtamil
0 comment 4 views
A+A-
Reset

கொலை செய்யப்பட்ட இளம் பெண்ணுக்காக டாக்டர்கள் ஒன்றிணைவது கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் என்று இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் கூறியுள்ளார்.

கொல்கத்தா,

கொல்கத்தா ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் கடந்த 9 ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கொல்லப்பட்ட பெண் டாக்டருக்கு நீதி கேட்டு கொல்கத்தாவில் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டம் கலவரமாகவும் மாறியது. குற்றவாளி கைது செய்யப்பட்ட நிலையிலும் போராட்டம் ஓய்ந்தபாடில்லை. இதற்கிடையில் இந்த வழக்கை மேற்கு வங்க அரசு சிபிஐ இடம் ஒப்படைத்துள்ளது.

இந்த நிலையில், "கொல்கத்தாவில் கொலை செய்யப்பட்ட பெண் டாக்டருக்கு நீதி கிடைப்பதில் தாமதம் ஏற்படவே கூடாது" என இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் கலந்துகொண்டார். அப்போது பேசும்போது அவர் கூறியதாவது:-

கொல்கத்தாவில் கொலை செய்யப்பட்ட இளம் பெண்ணுக்காக டாக்டர்கள் ஒன்றிணைவது கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். நீதி கிடைப்பதில் தாமதம் ஆகலாம், ஆனால் கிடைக்காமலே போய்விடக்கூடாது என்று கூறுவார்கள். அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். நீதி கிடைப்பதில் தாமதம் ஏற்படவே கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

You may also like

© RajTamil Network – 2024