மின்சார ரெயில்கள் ரத்து.. தாம்பரம், பல்லாவரத்தில் அலைமோதும் பயணிகள் கூட்டம்

by rajtamil
0 comment 13 views
A+A-
Reset

பயணிகளுக்கு தேவையான உதவிகளை போக்குவரத்து காவல்துறையினர் செய்து வருகின்றனர்.

சென்னை,

தாம்பரம் ரெயில் நிலைய யார்டு பணிகளுக்காக ரெயில் சேவையில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. கடந்த 14ம் தேதி வரை இருந்த ரெயில் சேவை ரத்து மற்றும் மாற்றம், 18ம் தேதி (இன்று) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் வசதிக்காக சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு மேல் மதியம் வரை ரெயில் சேவை இருக்காது என்பதால் தாம்பரம் மற்றும் பல்லாவரம் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. அத்துடன், இன்று விடுமுறை தினம் என்பதாலும், தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகளாலும் தாம்பரத்தில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

ரெயில் சேவை ரத்துசெய்யப்பட்டுள்ளதால், கடும் சிரமத்தை சந்தித்துள்ள பயணிகள், பேருந்துகளில் பயணம் செய்து வருகின்றனர். பயணிகளின் வசதிக்காக கோயம்பேட்டில் இருந்து செங்கல்பட்டுக்கு இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், பயணிகளுக்கு தேவையான உதவிகளை போக்குவரத்து காவல்துறையினர் செய்து வருகின்றனர். நாளை முதல் மின்சார ரெயில்கள் வழக்கம் போல செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024