11
கோவை: விவசாயிகளுக்கு எதிராக காவல்துறையை ஏவி திமுக அரசு பழிவாங்குகிறதோ என சந்தேகம் எழுந்துள்ளதாக விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
கோவை காரமடை, பொள்ளாச்சி ஆகிய இரு இடங்களில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்த காவல்துறை ஆய்வாளர்கள் அனுமதி மறுத்து விவசாயிகளை துன்புறுத்தியதைக் கண்டித்து கட்சி சார்பற்ற ஐக்கிய விவசாயிகள் சங்கம் எஸ்கேபி(என்பி) சார்பில், கோவை செஞ்சிலுவை சங்கம் அருகே ஆர்ப்பாட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்தது.