மேட்டுப்பாளையம் – குன்னூர் மலை ரெயில் சேவை மேலும் 3 நாட்களுக்கு ரத்து

by rajtamil
0 comment 16 views
A+A-
Reset

25ம் தேதி வரை ரெயில் சேவை ரத்துசெய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

நீலகிரி,

கோவை, நீலகிரி மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அவ்வப்போது மலைப்பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டு வருகிறது. தொடர் கனமழை மற்றும் மண் சரிவு காரணமாக கடந்த ஒரு வாரமாக மேட்டுப்பாளையம் குன்னூர் இடையிலான மலை ரெயில் சேவை 22-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே நிர்வாகம் அறிவித்து இருந்தது.

இந்த நிலையில், தொடர் சீரமைப்பு பணிகள் காரணமாக, மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையிலான மலை ரெயில் போக்குவரத்து ரத்து மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வருகிற 25ம் தேதி வரை ரெயில் சேவை ரத்துசெய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

You may also like

© RajTamil Network – 2024