Tuesday, September 24, 2024

வாழை அற்புதமான அனுபவம்: விஜய் சேதுபதி

by rajtamil
0 comment 14 views
A+A-
Reset

நடிகர் விஜய் சேதுபதி வாழை திரைப்படத்தைப் பாராட்டியுள்ளார்.

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கிய வாழை மற்றும் பி. எஸ். வினோத் ராஜ் இயக்கிய கொட்டுக்காளியும் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகின.

இரு திரைப்படங்களும் விமர்சன ரீதியாகவும் பாராட்டுகளைப் பெற்று வருகின்றன. முக்கியமாக, வாழை திரைப்படத்துக்கு ரசிகர்களிடையே வரவேற்பு கிடைத்திருக்கிறது.

பல திரையரங்களிலும் டிக்கெட் வேகமாக விற்பனையாகி வருகின்றன. தன் வாழ்வில் நடந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டே மாரி செல்வராஜ் இப்படத்தை உருவாக்கியிருக்கிறார்.

உண்மை சம்பவத்தின் சில பக்கங்கள்… வாழை – திரை விமர்சனம்!

பாலா உள்ளிட்ட பிரபல இயக்குநர்கள் பலரும் படத்தைப் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதி விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “வாழை அற்புதமான திரைப்படம். படம் முடிந்ததுபோல் தெரியவில்லை. இன்னும் அதற்குள்ளேயே இருக்கிறேன். இப்படி ஒரு படத்தை எடுத்தற்காக இயக்குநர் மாரி செல்வராஜுக்கு நன்றி. இந்த மாதிரி வாழ்க்கையைத் தெரிந்துகொள்வது நம் வாக்கையில் பல கேள்விகளை எழுப்பும் என நம்புகிறேன். இந்த அற்புதமான படத்தை திரையரங்கில் சென்று பாருங்கள்” எனக் கூறியுள்ளார்.

You may also like

© RajTamil Network – 2024