திமுகவினர் மீதான வழக்குகளுக்கு ஒரு மாதத்தில் தீர்வு: சட்டத் துறை அமைச்சர் ரகுபதி தகவல்

by rajtamil
0 comment 11 views
A+A-
Reset

திமுகவினர் மீதான வழக்குகளுக்கு ஒரு மாதத்தில் தீர்வு: சட்டத் துறை அமைச்சர் ரகுபதி தகவல்

புதுக்கோட்டை: திமுகவினர் மீதான வழக்குகளுக்கு ஒரு மாதத்தில் தீர்வு காணப்படும் என்று தமிழக சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறினார்.

புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற திமுக நகர பொது உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் எஸ்.ரகுபதி பேசியதாவது: தன் மீது வழக்கு இருந்ததால், வெளிநாடு செல்ல முடியவில்லை என்று முன்னாள் எம்எல்ஏ கவிதைப்பித்தன் வருத்தத்துடன் பேசினார். அவர் மீது மட்டுமல்ல, என் மீதும் 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன. திமுகவினர் மீதான வழக்கு விவரங்களைத் திரட்டி, 10 லட்சம் வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளன.

எனினும், காவல் துறையினர் வழக்கு விவரங்களை முறையாக கொடுக்காததால்தான், கட்சியினர் மீது சில வழக்குகள் நிலுவையில் உள்ளன. திமுகவினர் மீதுள்ள வழக்குகள் குறித்த பட்டியலைத் தந்தால், ஒரு மாதத்துக்குள் அவற்றுக்குத் தீர்வுகாணப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

You may also like

© RajTamil Network – 2024