புதுதில்லி: ஆம் ஆத்மி கட்சியின் தற்போதைய கவுன்சிலர்கள் 5 பேர் தில்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர்.
ஆம் ஆத்மி கட்சியின் தில்லியின் தற்போதைய கவுன்சிலர்களான ராம்சந்திரா (வார்டு 28), பவன் செஹ்ராவத் (வார்டு 30), மம்தா பவன் (வார்டு 177), சுகந்தா பிதுரி (வார்டு 178) மற்றும் மஞ்சு நிர்மல் (வார்டு 180) ஆகியோர் தில்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை பாஜகவில் இணைந்தனர்.
திமுகவை போல் பாஜகவும் இரட்டை வேடம் போடுகிறது: எடப்பாடி பழனிசாமி
பின்னர் தில்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா செய்தியாளர்களுடன் பேசுகையில், ஊழல் மற்றும் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களின் கூட்டத்துக்கு கூட்டத்தை திரட்டுவது தொடர்பாக தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்ததை அடுத்து ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் 5 பேர் பாஜகவில் இணைந்துள்ளனர் என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பாஜக எம்பிக்கள் ராம்வீர் சிங் பிதுரி, யோகேந்திர சந்தோலியா, கட்சியின் மூத்த தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி ஆகியோர் கலந்து கொண்டனர்.