Saturday, September 28, 2024

70 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை; 35 வயது நபர் கைது

by rajtamil
0 comment 11 views
A+A-
Reset

மும்பை,

மராட்டிய மாநிலம் லடூர் மாவட்டம் ஹிடா கிராமத்தை சேர்ந்த 35 வயது நபர் மன்சூர் ஷேக். இவருக்கு திருமணமான நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக மனைவி பிரிந்து சென்றுவிட்டார். மன்சூரின் தாயாரும் அவரை விட்டு வேறு ஊருக்கு சென்றுவிட்டார்.

இதனிடையே, மன்சூரின் வீட்டில் இருந்து கடந்த 2 நாட்களுக்குமுன் துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து போலீசாருக்கு கிராமத்தினர் தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த போலீசார், மன்சூர் வீட்டில் இருந்து 70 வயது நிரம்பிய மூதாட்டியின் உடலை கைப்பற்றனர். பிரேத பரிசோதனையில் மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கழுத்து நெரித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார் தலைமறைணா மன்சூரை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த மன்சூர் ஷேக்கை நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஷேக்கிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

You may also like

© RajTamil Network – 2024