திருப்பதியில் லட்டு வாங்க ஆதார் கட்டாயம்!

by rajtamil
0 comment 10 views
A+A-
Reset

திருப்பதியில் ஆதார் அட்டை காண்பித்தால் மட்டுமே லட்டு வழங்கப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

திருமலை திருப்பதி ஏழுமலையானை நாள்தோறும் 75 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். பண்டிகை மற்றும் விடுமுறை நாள்களில் கூடுதல் பக்தர்கள் வருகை தருவார்கள்.

திருப்பதியில் சாமி தரிசனம் செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் தேவஸ்தானம் சார்பாக பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டு வருகின்றது.

ஓடிபி கிடைப்பது இனி தாமதமாகும்! குறுஞ்செய்தி மூலம் நடக்கும் மோசடிகளை தடுக்க டிராய் அதிரடி

இந்த நிலையில், திருப்பதி லட்டுகளை வாங்கி இடைத்தரகர்கள் முறைகேடாக அதிக விலைக்கு விற்பனை செய்வதாக தொடர்ந்து புகார் எழுந்தது.

இதனைத் தொடர்ந்து, முறைகேட்டை தவிர்க்க ஆதார் அட்டை காண்பிக்கும் பக்தர்களுக்கு மட்டுமே இன்றுமுதல் லட்டு வழங்கப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

மேலும், ஒரு பக்தருக்கு ஒரு லட்டு மட்டுமே இலவசமாக வழங்கப்படும் என்றும், கூடுதல் லட்டு தேவைப்படுவோர் வழக்கம்போல் ரூ. 50 கொடுத்து பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024