Wednesday, September 25, 2024

2-வது டெஸ்ட்: இங்கிலாந்து அபார வெற்றி; தொடரைக் கைப்பற்றி அசத்தல்!

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 190 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது.

இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 427 ரன்களுக்கும், இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 196 ரன்களுக்கும் ஆட்டமிழந்தன. இதனையடுத்து, இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து அணி 251 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இலங்கைக்கு 483 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றும்; முன்னாள் இந்திய கேப்டன் நம்பிக்கை!

483 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய இலங்கை அணி 292 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், இங்கிலாந்து அணி 190 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணியில் அதிகபட்சமாக தினேஷ் சண்டிமால் 58 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, திமுத் கருணாரத்னே 55 ரன்களும், தனஞ்ஜெயா டி சில்வா 50 ரன்களும் எடுத்தனர்.

இங்கிலாந்து தரப்பில் கஸ் அட்கின்சன 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். கிறிஸ் வோக்ஸ் மற்றும் ஆலி ஸ்டோன் தலா 2 விக்கெட்டுகளையும், சோயப் பஷீர் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

எங்கு சென்றாலும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர் கௌதம் கம்பீர்: ஜாண்டி ரோட்ஸ்

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி செப்டம்பர் 6 ஆம் தேதி ஓவலில் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

You may also like

© RajTamil Network – 2024