Wednesday, September 25, 2024

சத்தீஸ்கர்: தண்டவாளத்தில் அமர்ந்து மொபைல் கேம் விளையாடிய 2 சிறுவர்கள் ரயில் மோதி பலி

by rajtamil
0 comment 15 views
A+A-
Reset

சத்தீஸ்கரில் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து மொபைலில் கேம் விளையாடிய 2 சிறுவர்கள் ரயில் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்பத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம், பத்மநாப்புர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரிசாலி பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் சனிக்கிழமை இரவு 7 மணியளவில் 14 வயது சிறுவர்கள் 2 பேர் மொபைலில் கேம் விளையாடிக்கொண்டிருந்தனர்.

மலையாள திரையுலக பாலியல் சர்ச்சை: மௌனம் கலைத்த மம்மூட்டி

அப்போது அந்த டல்லி ராஜ்ஹரா-துர்க் உள்ளூர் ரயில் மோதியது. இதில் சிறுவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

பலியானவர்கள் புரன் சாஹு, வீர் சிங் ஆகியோர் என்றும் அவர்கள் பிலாய் நகரில் உள்ள ரிசாலி செக்டார் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று சடலங்களை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணையும் நடைபெற்று வருகிறது.

ரயிலில் இருந்து வரும் ஹாரன் சத்தம் கேட்காத அளவுக்கு இருவரும் தங்கள் மொபைல் போன்களில் மூழ்கி இருந்ததாக காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

You may also like

© RajTamil Network – 2024