Wednesday, September 25, 2024

மலையாள திரையுலக பாலியல் சர்ச்சை: மௌனம் கலைத்த மம்மூட்டி

by rajtamil
0 comment 18 views
A+A-
Reset

மலையாள திரையுலகை உலுக்கும் பாலியல் சர்ச்சையில் நடிகர் மோகன்லாலைத் தொடர்ந்து மம்மூட்டியும் மௌனம் கலைத்தார்.

இதுகுறித்து மம்மூட்டி கூறியிருப்பதாவது, மலையாள திரையுலகில் அதிகார மையம் என ஒன்றும் இல்லை. ஹேமா கமிட்டி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஆலோசனைகளை வரவேற்கிறேன். பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டிய நேரம் இது. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தேவையான சட்டங்களை இயற்ற வேண்டும்.

எந்த அதிகாரக் கும்பலிலும் நான் இல்லை: பாலியல் புகார் விவகாரத்தில் மோகன்லால்

காவல் துறை நேர்மையாக விசாரிக்கட்டும. தண்டனைகளை நீதிமன்றம் தீர்மானிக்கட்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். மலையாள திரையுலகில் பெண்கள் சந்திக்கும் பாலியல் துன்புறுத்தல் மற்றும் சுரண்டல் நிகழ்வுகளை வெளிப்படுத்திய நீதிபதி ஹேமா குழு அறிக்கையைத் தொடர்ந்து, பல்வேறு இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் மீதான பாலியல் புகார்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்தப் புகார்களை விசாரிக்க 7 காவல் துறை அதிகாரிகள் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை மாநில அரசு அமைத்துள்ளது. ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏவும் நடிகருமான முகேஷ் உள்பட பல்வேறு நடிகர்கள் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதியப்பட்டது. நடிகர்கள் மீதான குற்றச்சாட்டுகளை அடுத்து, மோகன்லால் தலைமையிலான மலையாள திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் நிர்வாகக் குழு ராஜிநாமா செய்தது.

இதைத் தொடர்ந்து, மோகன்லால் முதன்முறையாக செய்தியாளர்களைச் சனிக்கிழமை சந்தித்தார். அப்போது, மலையாள திரையுலகில் எழுந்துள்ள பாலியல் புகார் விவகாரத்தில் எந்த அதிகாரக் கும்பலிலும் நான் இல்லை என்று அவர் தெரிவித்தார்.

You may also like

© RajTamil Network – 2024