"உண்மைக்குச் சோதனை வரும் ஆனால் தோற்கடிக்க முடியாது" என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
தில்லி கலால் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் கட்சியின் முன்னாள் தகவல் தொடர்பு பொறுப்பாளர் விஜய் நாயருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து ஆம் ஆத்மி இந்த கருத்தை வெளியிட்டுள்ளது.
செப்டம்பர் மாத பலன்கள்!
விசாரணை நீதிமன்றம் கூறுகையில், ஜாமீன் என்பது சட்டம் மற்றும் சிறை விதிவிலக்கு என்ற சட்டக்கோட்பாட்டை நம்பி விசாரணைக்கு முன்னர் சிறைவாசம் என்பது தண்டனையாக இருக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
இதுதொடர்பாக தில்லி அமைச்சர் அதிஷி வெளியிட்ட பதிவில்,
"சத்யமேவ் ஜெயதே"! ஆம் ஆத்மிக்கு எதிராக பாஜக மத்திய அரசு சதி செய்து பல கட்சித் தலைவர்களைச் சிறையில் அடைத்தது.
ஐசிஐசிஐ வங்கியிடம் ரூ. 16.8 கோடி பணம் வாங்கிய செபி தலைவர் மாதவி: காங்கிரஸ் குற்றச்சாட்டு!
மணீஷ் சிசோடியா மற்றும் விஜய் நாயர் ஜாமீன் பெற்ற நிலையில், உண்மைக்குச் சோதனை வரும் ஆனால் தோற்கடிக்க முடியாது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. மணீஷ் சிசோடியா, நாயர் எந்த ஆதாரமும் இல்லாமல் 23 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பாஜகவின் புனையப்பட்ட மதுபான ஊழல் வழக்கின் மற்றொரு பலூன் இன்று வெடித்தது. கால நேரம் ஆனாலும், இறுதியில் உண்மை எப்போதும் வெற்றி பெறும் என்று இந்தியில் சிசோடியா கூறினார்.
ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் தகவல் தொடர்பு பொறுப்பாளர் விஜய் நாயருக்கு உச்ச நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது குறிப்பிடத்தக்கது.