Tuesday, September 24, 2024

சத்தீஸ்கரில் 9 நக்சல்கள் சுட்டுக் கொலை!

by rajtamil
0 comment 15 views
A+A-
Reset

சத்தீஸ்கரின் தண்டேவாடா-பிஜப்பூர் எல்லையில் உள்ள வனத்தில் நடைபெற்ற என்கவுண்டரில் 9 நக்சல்கள் கொல்லப்பட்டதாகவும், ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

ராகுல், கார்கேவுடன் முதல்வர் ஹேமந்த் சோரன் சந்திப்பு!

தண்டேவாடா ஆய்வாளர் கௌரவ் ராய் கூறுகையில்,

நக்சல்களிடம் இருந்து ஏராளமான எஸ்எல்ஆர் துப்பாக்கிகள், .303 ரைபிள்கள் மற்றும் 315 போர் ரைபிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அனைத்து பாதுகாப்புப் படை வீரர்களும் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது.

பாஜக விசுவாசிகளுக்கு, கட்சி எப்போதும் அங்கீகாரம் அளிக்கும்: ரஞ்சன் தாஸ்

தண்டேவாடா மற்றும் பிஜாப்பூர் மாவட்டங்களின் எல்லைப் பகுதியில் மேற்கு பஸ்தார் பிரிவில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, கூட்டு போலீஸ் குழு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. இதையடுத்து காலை 10.30 மணிக்கு காவல் துறையினருக்கும் நக்சல்களுக்கும் இடையே என்கவுண்டர் தொடங்கியது.

இதற்கிடையில், ஆகஸ்ட் 29 அன்று, நாராயண்பூரில் உள்ள அபுஜ்மத் அடர்ந்த வனத்தில் கடந்த வாரம் பாதுகாப்புப் படையினருடன் நடந்த என்கவுண்டரில் மூன்று பெண் நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

© RajTamil Network – 2024