Tuesday, September 24, 2024

திகார் சிறையிலிருந்து வெளியே வந்தார் வைபவ் குமார்!

by rajtamil
Published: Updated: 0 comment 24 views
A+A-
Reset

ஆம் ஆத்மி கட்சி மாநிலங்களவை உறுப்பினா் ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட வழக்கில், தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் உதவியாளா் வைபவ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதையடுத்து திகார் சிறையிலிருந்து வெளியே வந்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.

கேஜரிவாலின் ஆலோசனைக்குப் பின் காங்கிரஸ் கூட்டணி இறுதி செய்யப்படும்: ஆம் ஆத்மி!

கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக சிறையிலிருந்த வைபவ் குமார், சிறை எண் ஐந்தில் இருந்து மதியம் 2 மணிக்கு விடுவிக்கப்பட்டதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. 100 நாள்களுக்கும் மேலாக காவலில் வைக்கப்பட்டுள்ளதைக் கவனத்தில் எடுத்துக்கொண்டு உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் அளித்தது.

சத்தீஸ்கரில் நக்சல் சுட்டுக் கொலை!

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த், உஜ்ஜல் புயான் ஆகியோா் அடங்கிய அமா்வு, அரசுத் தரப்பு 51-க்கும் மேற்பட்ட சாட்சிகளை விசாரிக்க முன்வந்துள்ளதைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, விசாரணை முடிவடைய காலமாகும் என்று கூறியது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், குமாரை விடுவிப்பதால் விசாரணைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் நீதிபதிகள் அமா்வு கூறியது.

கடந்த மே 13 அன்று கேஜரிவாலின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் குமார் மாலிவாலை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த மே 18ல் தில்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

© RajTamil Network – 2024