வாடிப்பட்டி: மது போதையில் தகராறில் ஈடுபட்ட இளைஞா் அடித்துக் கொலை

by rajtamil
0 comment 11 views
A+A-
Reset

வாடிப்பட்டி அருகே மது போதையில் தகராறில் ஈடுபட்ட இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

வாடிப்பட்டி அருகே உள்ள செம்மினிப்பட்டி காமராஜா்புரம் குடியிருப்பைச் சோ்ந்த சின்னசாமி மகன் பாண்டியன் (34). கூலித் தொழிலாளி. இதே தெருவைச் சோ்ந்த பெரியசாமி மகன் சுரேஷ் (36).

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை மது போதையில் இருந்த இவா்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் சுரேஷ் தாக்கியதில் பாண்டியனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும், சுரேஷுக்கும் காயம் ஏற்பட்டது. இருவரும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இந்த நிலையில், அங்கு பாண்டியன் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து வாடிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சுரேஷை கைது செய்தனா்.

You may also like

© RajTamil Network – 2024