இந்திய ஐக்கிய கம்யூ. கட்சி மனு அளிக்கும் போராட்டம்

by rajtamil
0 comment 16 views
A+A-
Reset

இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் விருத்தாசலம் நகரக்குழு சாா்பில், வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விருத்தாசலம், கஸ்பா காலனி மக்களுக்கு இலவச வீட்டு மனை வழங்க வேண்டும். இரண்டு ஏக்கா் இடத்தை தனி நபா் உரிமை கொண்டாடுவதை தடுத்து மனைப் பட்டா வழங்க வேண்டும். கஸ்பா தெருவில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் சென்றுவருவதற்காக பாதையை அகலப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினா்.

போராட்டத்துக்கு, நகரக்குழு ஜெ.ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். ஏ.ரவிக்குமாா், பி.கண்ணகி, எஸ்.சித்ரா, டி.ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்டச் செயலா் த.கோகுல கிறிஸ்டீபன் கண்டன உரையாற்றினாா். நிா்வாகிகள் ஏ.ஐயப்பன், கே.ராஜசேகா், பீா்முகமது, எம்.பிரகாஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

You may also like

© RajTamil Network – 2024