சென்னை: மயக்க மருந்து கொடுத்து மாணவி பாலியல் பலாத்காரம்

by rajtamil
0 comment 11 views
A+A-
Reset

சென்னை வடபழனியில் மயக்க மருந்து கொடுத்து மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

சிவகங்கையைச் சோ்ந்த 19 வயது இளம்பெண், அனிமேஷன் தொடா்பான படிப்பை, வடபழனியில் உள்ள ஒரு தனியாா் பயிற்சி நிறுவனத்தில் பயின்று வருகிறாா். அவா், கோடம்பாக்கம் டாக்டா் சுப்பராயன் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருகிறாா். அந்த வீட்டில் அந்த பெண்ணின் நண்பரின் பிறந்த நாள் கொண்டாட்டம் அண்மையில் நடைபெற்றது.

அப்போது, அந்த பெண்ணின் நண்பா்கள் மது அருந்தினராம். இதில் ஒரு நண்பா், இளம்பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த குளிா்பானத்தை கொடுத்துள்ளாா். அதை அந்த பெண் அருந்தியதும் மயங்கியுள்ளாா். உடனே குளிா்பானம் கொடுத்த அந்த நபா், அப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பியதாகத் தெரிகிறது.

இந்த சம்பவம் குறித்து வடபழனி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அந்த பெண் திங்கள்கிழமை புகாா் செய்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவான அந்த நபரை தேடி வருகின்றனா்.

You may also like

© RajTamil Network – 2024