Friday, September 20, 2024

குற்றால மெயின் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

by rajtamil
Published: Updated: 0 comment 32 views
A+A-
Reset

குற்றால மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து வருகின்றனர்.

தென்காசி,

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் காலம் என்பதால் குற்றால அருவிகளில் குளித்து மகிழ பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். ஆனால் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதைத் தொடர்ந்து குற்றாலம் மெயின் அருவியில் கடந்த 8-ந் தேதி ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குளிக்க தடை விதிக்கப்பட்டது. அந்த தடையானது நேற்று முழுவதும் நீடித்தது.

இந்நிலையில் இன்று காலை அருவியில் நீர்வரத்து குறைந்ததை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் அனுமதி அளித்துள்ளனர். தற்போது கோடை விடுமுறை முடிவுக்கு வந்துள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாக உள்ள நிலையில் மெயினருவி பகுதியில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து வருகின்றனர்.

குற்றாலத்தில் நீக்கப்பட்ட தடை… உற்சாக மகிழ்ச்சியில் பயணிகள்#Courtallam#Band#Tourists#thanthitvpic.twitter.com/WjtEjJeMrd

— Thanthi TV (@ThanthiTV) June 10, 2024

You may also like

© RajTamil Network – 2024