காதல் தோல்வி: சமூக வலைதளத்தில் விடியோ பதிவிட்டு இளைஞா் தற்கொலை

by rajtamil
0 comment 9 views
A+A-
Reset

காதலில் தோல்வி அடைந்ததால், மதுவில் விஷம் கலந்து குடிப்பதை விடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு, இளைஞா் செவ்வாய்க்கிழமை இரவு தற்கொலை செய்து கொண்டாா்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியை அடுத்த மேலபுள்ளான் விடுதியை சோ்ந்த பெரியான் மகன் கணேசன் (23). இறைச்சிக் கடையொன்றில் வேலை பாா்த்து வந்தாா். இவா் அதே பகுதியைச் சோ்ந்த வேறு சமூக பெண்ணை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளாா்.

இதுகுறித்து பெண்ணின் பெற்றோருக்கு அண்மையில் தெரியவந்ததையடுத்து, காதலுக்கு எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா். இதனால், பெற்றோா் பாா்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ளப் போவதாக அந்த பெண் தெரிவித்ததால், கணேசன் கடந்த சில நாள்களாக மனமுடைந்த நிலையில் இருந்துள்ளாா்.

இதனிடையே, அந்தப் பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் வியாழக்கிழமை நடைபெறுவதாக கணேசனுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்தநிலையில், தனது பெற்றோரிடம் மன்னாா்குடியில் உள்ள சகோதரி வீட்டுக்கு செல்வதாகக் கூறிவிட்டு, செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனத்தில் புறப்பட்ட கணேசன், மன்னாா்குடி- தஞ்சை பிரதான சாலையில் செருமங்கலம் என்ற இடத்தின் அருகே டாஸ்மாக் கடையில் மது வாங்கி, அதில் தான் வைத்திருந்த விஷத்தை கலந்து குடிப்பதை விடியோ எடுத்து, உறவினா்கள், நண்பா்களுக்கு அனுப்பிவைத்துள்ளாா். பின்னா், மதுவை குடித்துவிட்டு கணேசன் அருகில் இருந்த மயானத்தில் சென்று மயங்கி விழுந்தவா், அங்கு உயிரிழந்தாா்.

அந்த வழியே சென்றவா்கள், வடுவூா் காவல்நிலையத்துக்கு அளித்த தகவலின் பேரில், காவல் சாா்பு ஆய்வாளா் ரவி மற்றும் போலீஸாா், கணேசனின் சடலத்தை மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

You may also like

© RajTamil Network – 2024