7
‘காலமெல்லாம் பெரியது இதுதான்’ என்பது ஒரு சனாதனக் கருத்தில்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் விசிக எம்.பி. ரவிக்குமார்.
இது தொடர்பாக அவர் இன்று (வியாழக்கிழமை) தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “விஜய் படத்தின் தலைப்பில் ‘சனாதனம்’? The Greatest of all time என்பது ஒரு சனாதனக் கருத்தில்லையா? ‘காலமெல்லாம் பெரியது இதுதான்’ என்றால் காலம் மாறினாலும் இது மாறாது என்றுதானே அர்த்தம்! ‘என்றும் மாறாதது’ என்பதுதானே ‘சனாதனம்’ என்ற சொல்லின் பொருள்! இதைத் தெரிந்துதான் விஜய் படத்துக்குத் தலைப்பு வைத்தார்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.