11
சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள அனைத்து மருத்துவப் பணியிடங்களையும் போர்க்கால அடிப்படையில் நிரப்பிட அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளார் இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளுக்கு முழு அளவில் மருத்துவ வசதிகள் அளிக்கப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2012-ஆம் ஆண்டு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தைத் துவக்கினார். இதன்மூலம், சுமார் 7,629 மருத்துவர்கள்; 18,846 செவிலியர்கள் உட்பட சுமார் 31,250 மருத்துவப் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, பணியமர்த்தப்பட்டனர். ஆனால், 40 மாத கால திமுக ஆட்சியில் மருத்துவப் பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படவில்லை.