பா.ஜ.க.வில் இணைந்தார் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா

by rajtamil
Published: Updated: 0 comment 10 views
A+A-
Reset

புதுடெல்லி,

சமீபத்தில் நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா அறிவித்தார். இந்த நிலையில் ஜடேஜா தற்போது பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.

கடந்த 2-ம் தேதி பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கைக்காக சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. அன்று பிரதமர் நரேந்திர மோடி தனது கட்சி உறுப்பினர் பதவியை புதுப்பித்தார். இந்த சிறப்பு முகாமில் ரவீந்திர ஜடேஜா பா.ஜ.க.வில் இணைந்துள்ளார். இதனை அவரது மனைவி ரிவாபா ஜடேஜா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு தெரிவித்துள்ளார்.

#SadasyataAbhiyaan2024pic.twitter.com/he0QhsimNK

— Rivaba Ravindrasinh Jadeja (@Rivaba4BJP) September 2, 2024

ரிவாபா ஜடேஜா கடந்த 2019-ம் ஆண்டு பா.ஜ.க.வில் சேர்ந்தார். கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் சட்டமன்றத் தேர்தலில் ஜாம்நகர் வடக்கு தொகுதியில் போட்டியிட்டார். அவருக்காக ரவீந்திர ஜடேஜா பிரசாரம் செய்தார். அந்த தேர்தலில் ரிவாபா தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரை விட 50 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

© RajTamil Network – 2024