பாலிவுட்டில் முக்கியமான நடிகையாக இருப்பவர் கங்கனா ரணாவத். 2006-ஆம் ஆண்டு வெளியான அனுராக் காஷ்யப்பின் 'கேங்ஸ்டர்' என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான கங்கனா ரனாவத் தனது சிறப்பான நடிப்பினால் இதுவரை 4 முறை தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.
2019இல் ‘மணிகர்னிகா- ஜான்சி ராணி’ படத்தினை கிறிஸ் ஜகர்லாமுடி உடன் இணைந்து இயக்கியுள்ளார்.
எமர்ஜென்சி படத்தினை முழுக்க முழுக்க கங்கனா ரணாவத்தே இயக்கியுள்ளார். இந்தப் படத்தை தணிக்கை செய்யாமல் மிரட்டுவதாக சமீபத்தில் கூறியிருந்தார்.
ரூ.750 கோடியை நெருங்கும் பாலிவுட் திரைப்படம்!
இந்தப் படம் இன்று (செப்.6) வெளியாகவிருந்தது. இந்நிலையில் கங்கனா தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:
நான் இயக்கிய எமர்ஜென்சி திரைப்படம் தள்ளிப்போவதை கனத்த இதயத்துடன் தெரிவிக்கிறேன். தணிக்கை வாரியத்திடம் இருந்து சான்றிதழ் பெற காத்திருக்கிறோம். விரைவில் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும். காத்திருப்புக்கும் புரிதலுக்கும் நன்றி எனக் கூறியுள்ளார்.