உச்சிப்புள்ளி அருகே அரசுப் பேருந்து மீது கார் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் உள்பட 5 பேர் பலியானார்கள்.
ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து திடீரென நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
அப்போது பின்னால் வந்த கார், அரசுப் பேருந்து மீது மோதியது. இந்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் உள்பட 5 பேர் பலியானார்கள்.
பிறந்து 12 நாட்களே ஆன குழந்தை உள்பட 3 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தவெகவுக்கு சட்டப்பூர்வ அனுமதி: விஜய் தகவல்
பயணி ஒருவர் வாந்தி எடுத்ததால் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து நிறுத்தப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
எனினும், விபத்து தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு நிலவியது.