Friday, September 20, 2024

சென்னையில் அக். 8ல் விமானப் படையின் சாகச நிகழ்ச்சி!

by rajtamil
0 comment 20 views
A+A-
Reset

இந்திய விமானப்படையின் நிறுவன தினம் சென்னையில் கொண்டாடப்படவுள்ளது.

1932 ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் தேதி விமானப்படை நிறுவப்பட்டதை நினைவுகூரும் வகையில் விமானப்படையின் நிறுவன தினம் கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில், இந்திய விமானப்படையின் நிறுவன தினக் கொண்டாட்டங்களை நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்தும் பாரம்பரியத்தை கருத்தில் கொண்டு, 92 ஆவது ஆண்டு விமானப்படை தின அணிவகுப்பு மற்றும் விமான கண்காட்சி, அக்டோபர் 8 ஆம் தேதியில் தமிழ்நாட்டின் சென்னையில் நடைபெறவுள்ளது. இதற்கு முந்தைய கொண்டாட்டங்கள் சண்டிகர் மற்றும் பிரயாக்ராஜில் நடைபெற்றன.

கொண்டாட்டத்தின்போது, இந்திய விமானப்படை அணிவகுப்பு, சென்னையில் காலை 7.45 மணியளவில் தொடங்கும் என்று அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அணிவகுப்பைத் தொடர்ந்து, மெரினா கடற்கரையில் ஒரு பிரமாண்டமான விமானக் கண்காட்சி நடைபெறும்.

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் யார்?

இதில் ரஃபேல், சூகோய், தேஜாஸ் உள்ளிட்ட இந்திய விமானப்படையின் முன்னணி போர் விமானங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

ஆகாஷ்கங்கா ஸ்கைடைவிங் காட்சி குழுவும் வான்வழி சாகசங்களை நிகழ்த்தும்; மேலும், சென்னையில் இந்த வரலாற்று நிகழ்வு, ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொண்டாட்டத்தின் நிகழ்ச்சிகள், ஒரு புதிய விமானப்படை தளபதியின் தலைமையின்கீழ் நடைபெறும்; அவர் இந்த மாத இறுதியில் பதவியேற்க உள்ளார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024