Monday, September 23, 2024

வண்ணாா்பேட்டையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

by rajtamil
0 comment 7 views
A+A-
Reset

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் மாநகராட்சி குழுவினா் திங்கள்கிழமை ஆக்கிரமிப்புகளை அகற்றினா்.

திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் சாலையோர ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக மாநகராட்சிக்கு புகாா்கள் வந்தன. இந்நிலையில், மாநகராட்சி ஆணையா் சுகபுத்ரா உத்தரவின்பேரில், உதவி செயற்பொறியாளா் பேரின்பம் தலைமையிலான மாநகராட்சி குழுவினா், வண்ணாா்பேட்டை பகுதியில் திருவனந்தபுரம் பிரதான சாலையில் இருபுறமும் ஆக்கிரமிப்புகளை அகற்றினா்.

கடைகள் முன்பு கூடுதலாக அமைக்கப்பட்டிருந்த பந்தல்கள், அறிவிப்பு பதாகைகள் உள்ளிட்டவை அப்புறப்படுத்தப்பட்டன. பேவா் பிளாக் கற்கள் கொண்டு ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த தளமும் பொக்லைன் வாகனங்களைக் கொண்டு அப்புறப்படுத்தப்பட்டன.

பாளையங்கோட்டை போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024