Monday, September 23, 2024

கொல்கத்தா மருத்துவமனை முன்னாள் முதல்வருக்கு நீதிமன்றக் காவல்!

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset

கொல்கத்தா ஆா்.ஜி.கா் அரசு மருத்துவமனை முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷை செப். 23 வரை நீதிமன்றக் காவலில் வைக்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த மாதம் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆா்.ஜி.கா் அரசு மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா், பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டாா்.

இதையடுத்து, மருத்துவமனையின் முதல்வராக இருந்த சந்தீப் கோஷ் தனது பதவியை ராஜிநாமா செய்தாா். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

உலகின் முதல் டிரில்லியனர் யார் தெரியுமா? 2-வது அதானி!

பின்னர் விசாரணையில், மருத்துவமனையில் நியமனங்களில் ஊழல், நிதி முறைகேட்டில் கடந்த செப். 2ல் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து சிபிஐ நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கின் விசாரணையில், சந்தீப் கோஷ் மற்றும் மூவருக்கு செப். 23 வரை நீதிமன்றக் காவல் அளித்த உத்தரவிடப்பட்டுள்ளது.

பயிற்சி பெண் மருத்துவர் கொலைக்கும் இந்த நிதி முறைகேட்டுக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் விசாரணை தேவைப்பட்டால் சந்தீப் கோஷின் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்படலாம் என்று சிபிஐ கூறியுள்ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024