விநாயகர் சதுர்த்தி பண்டிகை தொடங்கி 3 நாள்கள் நிறைவடைந்த நிலையில் இதன் தொடர்ச்சியாக வரும் 15ஆம் தேதியன்று காலை போலீசார் பாதுகாப்புடன் பட்டினப்பாக்கம், காசிமேடு கடற்கரையில் விநாயகர் சிலையை கரைக்க உள்ளனர்.
சென்னை பெருநகர புளியந்தோப்பு, கொளத்தூர் மாவட்டம் உள்பட்ட பகுதிகளில் உள்ள விநாயகர் சிலைகளை ஊர்வலமாகக் கொண்டு செல்ல காவல்துறையினர் பாதுகாப்பு பலப்படுத்த உள்ளனர். மேலும் சில விதிமுறைகளையும் வழங்கியுள்ளனர்.
விநாயகர் சிலை கரைக்கும் பணியில் வெளி நபர்களை ஊர்வலத்துக்கு அனுமதிக்கக்கூடாது என்றும், மீறினால் விநாயகர் வழிநடத்தும் சம்பந்தப்பட்ட நபரின் மீது வழக்குப்பதிவு செய்ய நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்
விநாயகர் சிலைகளை ஊர்வலமாகக் கொண்டுசெல்லும் வழித்தடங்கள் மற்றும் கரைக்கும் இடங்கள்..
(1) புளியந்தோப்பு பட்டாளம் அசோக ஹோட்டல் உள்ள விநாயகர் சிலைகளை பெரம்பூர் பேரக்ஸ் ரோடு, சார்மினார் மாஸ்க், வழியாக ஆஞ்சநேயர் கோயில் சாலையைக் கடந்து அஜ் கமிட்டி செல்லும் எலிபன்ட் கெட் மேம்பாலம் வால் டெக்ஸ் ரோடு வழியாக மெரினா கடற்கரை செல்லும் பிரதான சாலையில் பட்டினப்பாக்கத்தில் விநாயகர் சிலையைக் கடற்கரையில் கரைக்க உள்ளனர்.
(2) கே.ஹெச் ரோடு ஜங்ஷன் உள்ள விநாயகர் சிலைகளை ஊர்வலமாக ஓட்டேரி மேம்பாலம் சாலை வழியாக பட்டாளம் ஆஞ்சநேயர் கோயில் வழியாக அஜ்கமிட்டி எலிபன்ட் கேட் மேம்பாலம் வால்டெக்ஸ் ரோடு ஃபிஷர் எஸ்டேட் மெரினா கடற்கரை பட்டினம் பாக்கம் பிரதான சாலையைக் கடந்து கடற்கரையில் விநாயகரைக் கரைக்க உள்ளனர்
3) எம் ஆர் நகர் நான்கு வழி சாலையில் உள்ள விநாயகரை தண்டையார்பேட்டை சாலை வழியாக ஆர் ஆர் நகர் எழில் நகர் மணலி சாலை ஆர் கே நகர் எண்ணூர் ரோடு வழியே பிஷர் ஹார்பர் காசிமேடு கடற்கரையில் விநாயகரைக் கரைக்க உள்ளனர்,
4) மணலி சாலை சின்னக் கொடுங்கையூர் நார்த் அவென்யூ பகுதியில் உள்ள விநாயகரை டி எச் ரோடு எருக்கஞ்சேரி சிக்னல் வழியே அம்பேத்கர் கல்லூரி வழியாக வியாசர்பாடி பிஷர் ஹார்பர் காசிமேடு கடற்கரையில் விநாயகரைக் கரைக்க உள்ளனர்.
5) வியாசர்பாடி அம்பேத்கர் நான்கு வழி சாலையில் உள்ள விநாயகர் சிலையை வெஸ்ட் அவென்யூ சென்ட்ரல் அவென்யூ எஸ் எம் நகர் மெயின் ரோடு வழியாக அசோக் பில்லர் வியாசர்பாடி காந்திநகர் ஜங்ஷன் வழியாக ஹஜ் கமிட்டி எலிபன்ட் கெட் பிரிட்ஜ் மேம்பாலம் வழியே வால்டெக்ஸ் ரோடு பிரதான சாலையில் வழியாக விநாயகரைப் பக்த கோடிகள் பட்டினம் பாக்கம் மெரினா கடற்கரை பட்டினம் பாக்கம் கடற்கரையில் விநாயகர் சிலையை கரைக்க உள்ளனர்
6) டாக்டர் அம்பேத்கர் கல்லூரி புறப்பட உள்ள விநாயகர் சிலைகள் முத்து முதலில் தெரு வழியாக வியாசர்பாடி அசோக் பில்லர் ஜங்ஷன் வழியாக பேஷன் பிரிஜ் வழியே மேம்பாலம் காந்திநகர் ஜங்ஷன் வழியே வால் டெக்ஸ் ரோடு பிரதான சாலை, மெரினா கடற்கரை சாலை வழியே பட்டினப்பாக்கம் கடற்கரையில் விநாயகர் சிலையைக் கரைக்க உள்ளனர்
7) கொளத்தூர் மாவட்டம் பகுதியில் உள்ள விநாயகர் சிலையை ரெட்டேரி நான்கு வழி சாலையைக் கடந்து பேப்பர் மில்ஸ் சாலை, எழுந்த அடி சாலை அகரம் நான்கு வழி சாலை, காந்தி ஸ்ட்ரீட் பெரம்பூர் செம்பியம் வழியே, முரசொலி மாறன் பூங்கா வழியாக பெரம்பூர் பேருந்து நிலையம் சென்று டிபி ரோடு ஜங்ஷன் ஜீவா ரயில்வே ஸ்டேஷன் வழியே ஸ்டீபன் சாலை கணேசபுரம் வழியாக சுந்தரபுரம் மெயின் ரோடு வழியாக வியாசர்பாடி அசோக் பில்லர் ஜங்ஷன் பேஷன் பிரிட்ஜ் வழியே வால்டெக்ஸ் ரோடு சாலையை கடைப்பிடித்து மெரினா கடற்கரை பட்டினம் பாக்கம் கடற்கரையில் விநாயகர் சிலைகளைப் பக்த கோடிகள் போலீசார் பாதுகாப்புடன்