ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வினேஷ் போகத் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
இந்த நிகழ்வின்போது, காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை உறுப்பினருமான தீபேந்தர் ஹூடா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த வினேஷ் போகத், கடந்த வாரம் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோரை சந்தித்த பிறகு அந்த கட்சியில் இணைந்தார்.
இதனைத் தொடர்ந்து, அக்டோபர் 5-ஆம் தேதி நடைபெறவுள்ள ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் ஜுலானா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வினேஷ் போகத் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது.
எந்த உதவியும் வழங்கவில்லை; அனுமதியின்றி படம் எடுத்தார்கள்! வினேஷ் போகத்
வினேஷ் போகத் பேட்டி
ஜுலானா சட்டப்பேரவைத் தொதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை புதன்கிழமை தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களை வினேஷ் போகத் சந்தித்தார்.
அப்போது, “அரசியலுக்கு வருவது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம். அனைத்து பிரிவினரின் நலனுக்காகவும் நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம். ஜுலானா மக்கள் எனக்கு அளித்து வரும் அன்புக்கு நான் நன்றியுள்ளவளாக இருப்பேன்” எனத் தெரிவித்தார்.