28
அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
சென்னை,
தென்மேற்கு பருவமழை கடந்த மாதம் 30-ந்தேதி தொடங்கிய நிலையில், தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. இது மட்டுமல்லாமல், வெப்ப சலனம் காரணமாகவும் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதன்படி, கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, தேனி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.