Friday, September 20, 2024

சிதம்பரம் அருகே கார் மீது லாரி மோதி விபத்து: 5 பேர் பலி

by rajtamil
0 comment 16 views
A+A-
Reset

சிதம்பரம்: சிதம்பரம் அருகே பு.முட்லூர் புறவழிச் சாலையில் காரும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே பு.முட்லூர் புறவழிச் சாலையில் சென்னையில் இருந்து மயிலாடுதுறை நோக்கிச் சென்று கொண்டிருந்த கார் மீது வியாழக்கிழமை அதிகாலை லாரி மோதி விபத்துக்குள்ளானது.

மதுரை பெண்கள் விடுதியில் தீ! இரு மாணவிகள் பலி!

இதில், காரில் பயணித்த மயிலாடுதுறை நக்கம்பாடியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 வயது சிறுவன், 2 பெண்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

பலியானவர்களில் நக்கம்பாடியைச் சேர்ந்த முகமது அன்வர்(56), ஹாஜிதா பேகம்(62),யாசர் அராபத்(40), அராபத் நிஷா(30), சிறுவன் அஃப்னான்(3) ஆகியோர் பலியாகினர்.

சென்னையில் சிகிச்சை பெற்று வரும் உறவினரை சந்தித்துவிட்டு திரும்பும்போது விபத்து நிகழ்ந்துள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் உடல்களை மீட்டு உடல்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024