ரூ.58,500 சம்பளத்தில் 8 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை: விண்ணப்பிக்க நாளை கடைசி!

by rajtamil
0 comment 10 views
A+A-
Reset

சென்னை மாவட்ட புழல் மத்திய சிறையில் காலியாக உள்ள சமையலர், ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 13 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: சமையலர்(Cook) – 1

சம்பளம்: மாதம் ரூ. 15,900 – 58,500

வயதுவரம்பு: 18 முதல் 34 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் சமையலர் பணியில் குறைந்தபட்சம் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: லாரி ஓட்டுநர் (Lorry Driver) – 1

சம்பளம்: மாதம் ரூ. 19,500 – 71,900

வயதுவரம்பு: 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பதுடன் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: நெசவு பேதகர் (Weaving Instructor) -1

சம்பளம்: மாதம் ரூ. 19,500 – 71,900

வயதுவரம்பு: 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: தமிழக அரசின் கைத்தறி நெசவு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

குரூப் 4 தேர்வு: கூடுதலாக 480 காலிப்பணியிடங்கள் சேர்ப்பு!

விண்ணப்பிக்கும் முறை: www.chennai.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் அல்லது ஏ4 அளவு வெள்ளைத்தாளில் தட்டச்சு செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: சிறை கண்காணிப்பாளர், மத்திய சிறை – 1, புழல், சென்னை – 66, தொலைபேசி : 044-26590615.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024