நடிகை ராதிகா தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல 200க்கும் அதிமான படங்களில் நடித்துள்ளார். சீரியல்களிலும் நடித்து வருகிறார்.
சமீபத்தில் சர்ச்சையான ஹேமா கமிட்டி குறித்து பேசும்போது மலையாள படப்பிடிப்பின்போது கேரவன்களில் உடைமாற்றுவதை விடியோ எடுக்கப்பட்டது குறித்து பேசி இருந்தார்.
அரசியலில் பாஜக கட்சிக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:ஹேக் செய்யப்பட்ட நயன்தாராவின் எக்ஸ் கணக்கு!
கடைசியாக தமிழில் லவ் டுடே, கொலை, சந்திரமுகி 2, மேரி கிறிஸ்துமஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார். துருவ நட்சத்திரம் இன்னும் வெளியாகவில்லை.
இந்நிலையில் இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலியுடன் செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அதில் ராதிகா சரத்குமார் கூறியதாவது:
மில்லியன் கணக்கான மக்களின் இதயங்களில் இருப்பவர் விராட் கோலி. அவரது விளையாட்டு ஆர்வத்தினால் நம்மைப் பெருமைப்பட வைத்தவர். அவருடன் பயணித்தது மிக்க மகிழ்ச்சி. செல்ஃபி புகைப்படத்துக்கு நன்றி எனக் கூறியுள்ளார்.
இதையும் படிக்க: 100 கோடி ஃபாலோயர்களை பெற்ற ரொனால்டோ! வரலாற்று சாதனை!
சச்சின் சாதனையை முறியடிக்கும் கோலி
விராட் கோலி இன்று சென்னை வந்தடைந்தார். வங்கதேசம் உடனான டெஸ்ட் போட்டியில் விளையாட சென்னை வந்த விராட் கோலியை ராதிகா விமானத்தில் சந்தித்துள்ளார்.
147 ஆண்டுகள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக குறைந்த போட்டிகளில்(623) 27,000 சர்வதேச ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை சச்சின் டெண்டுல்கர் படைத்துள்ளார்.
இந்திய வீரர் விராட் கோலி, இதுவரை 591 போட்டிகளில் விளையாடி, 26,942 ரன்களை குவித்துள்ளார்.
இன்னும் 58 ரன்கள் எடுத்தால் போது சச்சினின் சாதனை முறியடிக்கப்படும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் இந்தப் போட்டி ஆர்வத்தை தூண்டியுள்ளது.