Saturday, September 21, 2024

காஷ்மீரில் துப்பாக்கி சண்டை: 2 வீரர்கள் வீர மரணம்

by rajtamil
Published: Updated: 0 comment 14 views
A+A-
Reset

ஜம்மு,

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சமீப காலமாக பயங்கரவாதிகளின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில், காஷ்மீரின் கீட்ஷ்வார் மாவட்டத்தில் சாட்ரோ என்ற பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது பயங்கரவாதிகளின் மறைவிடத்தை பாதுகாப்புபடையினர் சுற்றி வளைத்தனர்.

இரு தரப்பிலும் பயங்கர துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இதில் 2 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். வீரமரணம் அடைந்தவர்களில் விமன் குமார், அரவிந்த் சிங் என ராணும் தெரிவித்துள்ளது. தொடர்ந்து அங்கு பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளுக்கு எதிராக துப்பாக்கி சண்டை நடத்தி வருகின்றனர். இதே போன்று கத்துவா மாவட்டத்திலும் நடந்த பயங்கரவாதிகளின் நடமாட்டம் உள்ள பகுதிகளில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது இரண்டு பயங்கரவாதிக்ள சுட்டுக்கொல்லப்பட்டனர்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024