நடிகை கண்மணியிடம் அனுமதி கேட்டு தாலி கட்டிய காதலன்!

by rajtamil
0 comment 8 views
A+A-
Reset

சின்னத்திரை நடிகை கண்மணி மனோகரன் – தொகுப்பாளர் அஷ்வத் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இதன் விடியோ மற்றும் புகைப்படங்களை கண்மணி தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

நீண்ட நாள்களாக காதலித்து வந்த கண்மணி, இன்று தனது காதலன் அஷ்வத்தை திருமணம் செய்துகொண்டதற்கு, சின்னத்திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

திருமணத்தின்போது தாலி கட்டுவதற்கு முன்பு தனது காதலியிடம் அனுமதி கேட்டு அஷ்வத் தாலி கட்டிய விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

திருமணத்தின்போது கண்மணி மனோகரன் – அஷ்வத்

கண்மணியின் காதல்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா தொடரில் அஞ்சலி என்ற பாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனங்களைக் கவர்ந்தவர் நடிகை கண்மணி மனோகரன். அந்தத் தொடரில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அமுதாவும் அன்னலட்சுமியும் தொடரில் நடித்திருந்தார். இந்தத் தொடரும் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது காதலனை ரசிகர்களுக்கு கண்மணி அறிமுகப்படுத்தினார். சன் தொலைக்காட்சியின் வணக்கம் தமிழா, உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிவரும் அஷ்வத்தை காதலிப்பதாக அறிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து பெற்றோர் சம்மதத்துடன் நடைபெற்று முடிந்த நிச்சயதார்த்த புகைப்படங்களையும் கடந்த ஜூன் மாதம் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் இருவரும் பகிர்ந்திருந்தனர்.

நிச்சயதார்த்த புகைப்படங்களுக்கு, இவர்களின் ரசிகர்கள் பலர் வாழ்த்துகளைத் தெரிவித்து வந்தனர்.

நடிகை கண்மணி மனோகரன் – தொகுப்பாளர் அஷ்வத்

மூன்று முடிச்சு தொடரில் இணையும் நடிகை தர்ஷனா!

தாலிகட்ட அனுமதி கேட்ட அஷ்வந்த்

திருமண நிச்சயதார்த்தத்தைத் தொடர்ந்து, திருமண வேலைகளில் கண்மணியும் அஷ்வத்தும் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர். அதன் ஒரு பகுதியாக திரைப்பிரபலங்கள் பலரையும் சந்தித்து தங்களின் திருமண அழைப்பிதழை வங்கினர்.

திருமண பத்திரிக்கையை நடிகர் விஜய் சேதுபதிக்கும் , சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டுக்குச் சென்று அவரின் மனைவி லதா ரஜினிகாந்திடமும் கொடுத்து ஆசி பெற்றனர்.

விஜய் சேதுபதி உடனும், லதா ரஜினிகாந்துடனும்..

இதனைத்தொடர்ந்து அவர்களுக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. இதில் சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் அவர்களின் நண்பர்கள் கலந்துகொண்டனர்.

திருமணத்தின்போது மணமேடையில் தாலி கட்டுவதற்கு முன்பு, கண்மணி உனக்கு ஓகேவா? என அனுமதி கேட்டு அஷ்வத் தாலிகட்டினார். இந்த விடியோ இணையத்தில் பலரின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

நீண்ட நாள்களாக காதலித்து திருமணம் செய்ய இருந்தாலும், திருமணத்துக்கு முன்பு, மணப்பெண்ணிடம் அனுமதி கேட்டு தாலி கட்டியுள்ளார் என அஷ்வத்துக்கு பலர் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024