Saturday, September 21, 2024

ராகுல் காந்தி நாக்கை அறுப்பேன் என கூறிய எம்.எல்.ஏ. மீது வழக்குப் பதிவு

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

புதுடெல்லி,

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி சமீபத்தில் அமெரிக்கா சென்றார். அங்கு பேசிய அவர், "இந்தியா அனைவருக்கும் வாய்ப்பு வழங்கும் நாடாக இருக்குமானால் இங்கு இட ஒதுக்கீட்டை நிறுத்துவது குறித்து காங்கிரஸ் கட்சி யோசிக்கும் என்றும் 90 சதவீத மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாமல் இருக்கும் நாட்டில் இருப்பதற்கு எனக்கு விருப்பமில்லை" என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து, ராகுல்காந்தி இட ஒதுக்கீட்டை ஒழிக்க பார்க்கிறார் என்று பாஜக குற்றம் சாட்டியது. இந்நிலையில், ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவருக்கு ரூ.11 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று ஏக்நாத் ஷிண்டேவின் தலைமையிலான சிவசேனா கட்சியின் எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சஞ்சய் கெய்க்வாட் பேசிய சர்ச்சை கருத்துக்கள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது. இந்த வீடியோ வைரல் ஆனதை அடுத்து, சஞ்சய் கெய்க்வாட் மீது புல்தானா நகர காவல் நிலையத்தில் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024