டாடா அறிமுகப்படுத்திய புதிய கார்!

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

புதிய டாடா பஞ்ச் மாடலானது ரூ.6.12 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் – மும்பை) ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கார் சிட்ரோயன் நிறுவனத்தின் சி3, ஹூண்டாய் எக்ஸ்டர் மாடல்களுக்கு போட்டியாக களத்தில் வருகிறது. இந்த காரில் பல அப்டேட் இடம் பெற்றுள்ள நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மாறுபட்ட சன்ரூஃப் வாகனத்தின் கூரையில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட டாடா பஞ்ச் மாடலானது பத்து வித வேரியண்ட்களில் கிடைக்க உள்ளது. இந்த கார் முந்தைய வெர்ஷன் விற்பனை செய்யப்பட்டு வந்த நிறங்களிலும் கிடைக்கும். அதே வேளையில் பியூர், பியூர் (O), அட்வென்ச்சர், அட்வென்ச்சர் ரிதம், அட்வென்ச்சர் எஸ், அட்வென்ச்சர் + எஸ், ஆக்காம்பிளிஷ் +, ஆக்காம்பிளிஷ் + எஸ், கிரியேட்டிவ்+ எஸ் ஆகிய வேரியண்ட்களில் கிடைக்கும்.

வரலாறு காணாத உயர்வுக்குப் பிறகு சரிந்து முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி!

வயர்லெஸ் ஆப்பிள் கார் பிளே, 10.25 இன்ச் அளவில் உள்ள தொடுதிரை இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, வயர்லெஸ் சார்ஜர், ரியர் ஏசி வெண்ட்கள், முன்புறம் ஆர்ம்-ரெஸ்ட் உடன் சென்டர் கன்சோலில் யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் போர்ட் உள்ளிட்ட பல புதிய அம்சங்களை பஞ்ச் பெறுகிறது.

மைக்ரோ எஸ்யூவியில் வேறு எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை என்றாலும், ஆட்டோ கிளைமேட் கன்ட்ரோல், பவர்-ஃபோல்டிங் விங் மிரர்கள், குட்டை விளக்குகள், பின்புற இருக்கையில் சென்டர் ஆர்ம்ரெஸ்ட், கூல்டு க்ளோவ் பாக்ஸ், எல்இடி – டிஆர்எல்கள், வைப்பர்களுடன் கூடிய ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள் மற்றும் ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள் ஆகிய அம்சங்கள் இதில் அடங்கும்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024