Friday, September 20, 2024

குரூப் 4 காலிப் பணியிடங்களை மேலும் அதிகரிக்கத் திட்டம்?

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்களை அதிகரிக்க தமிழக அரசு திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு அறிவிப்பு கடந்த ஜனவரி மாதம் வெளியானது.

ஜனவரி 30 ஆம் தேதி முதல் பிப்ரவரி 26 ஆம் தேதி வரை விண்ணப்பப் பதிவு நடைபெற்றது. பின்னர் ஜூன் 9-ல் நடைபெற்ற தேர்வை சுமார் 16 லட்சம் பேர் எழுதினர்.

இதன் முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே 480 பணியிடங்கள் அதிகரிக்கப்படுவதாக கடந்த செப். 11ல் அறிவிப்பு வெளியானது.

ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமில்லாதது: முதல்வர் மு.க. ஸ்டாலின்

மேலும் குரூப் 4 பிரிவில் நிரப்பப்பட வேண்டிய காலிப் பணியிடங்கள் இருப்பதால் எண்ணிக்கையை அதிகரிக்க தமிழ்நாடு அரசுக்கு தேர்வர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

அதனடிப்படையில், குரூப் 4 காலி பணியிடங்களை அதிகரிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அக்டோபர் முதல் அல்லது 2-வது வாரத்தில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024