குற்றால அருவிகளில் குவியும் சுற்றுலா பயணிகள்.. அருவிகளில் ஆனந்த குளியல்

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

குற்றாலம் மெயின் அருவியில் நீண்ட வரிசையில் நின்று மக்கள் குளித்து மகிழ்ந்தனர்.

தென்காசி,

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சாரல் மழை பொழிந்து குளுமையான சீசன் நிலவும். இந்த ரம்மியமான சூழலில் குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரித்து விழும் தண்ணீரில் குளித்து மகிழுவதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

இதற்கிடையே, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த மழை காரணமாக தற்போது அருவிகளில் சீராக தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இதனால் தற்போது அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், இன்று விடுமுறை தினம் என்பதால், அருவிகளில் மக்கள் குவிந்துள்ளனர். மெயின் அருவியில் நீண்ட வரிசையில் நின்று மக்கள் குளித்து மகிழ்ந்தனர். அத்துடன், ஐந்தருவி, பழைய குற்றால அருவியிலும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024