ஜெயம் ரவியுடான நட்பு குறித்து பாடகி விளக்கம்

by rajtamil
0 comment 2 views
A+A-
Reset

நடிகர் ஜெயம் ரவியுடான நட்பு குறித்து பாடகி கெனிஷா விளக்கமளித்துள்ளார்.

சென்னை,

நடிகர் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்திக்கு 2009ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.செப்டம்பர் 9ம் தேதி தன் மனைவியைப் பிரிவதாக ஜெயம் ரவி அறிக்கை வெளியிட்ட நிலையில், சென்னை நீதிமன்றத்தில் திருமணத்தை ரத்து செய்யக் கோரி மனுவும் அளித்துள்ளார்.இரண்டு நாள்களுக்குப் பிறகு ஜெயம் ரவியின் முடிவானது கலந்து ஆலோசிக்காமல் அவரே தன்னிச்சையாக எடுத்தது என்று ஆர்த்தி அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இதனையடுத்து, ஜெயம் ரவிக்கும் பாடகி கெனிஷா பிரான்சிசுக்கும் பழக்கம் இருப்பதனாலேயே மனைவியை பிரிய முடிவு செய்துள்ளதாக இணையத்தில் வதந்தி பரவியது. இந்நிலையில், இதற்கு ஜெயம் ரவி விளக்கம் அளித்திருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில், ' நான் எடுத்த விவாகரத்து முடிவு அவருக்கு தெரியாது என்பதில் எந்த லாஜிக்கும் இல்லை. அவருக்கு ஏற்கனவே இரண்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறேன். அவர்கள் தரப்பில் பேசியும் இருக்கிறார்கள். இப்படி இருந்தும் தனக்கு தெரியாது என்று அவர் கூறுவது ஆச்சரியமாக உள்ளது. மகன்களுக்காக அமைதியாக இருக்கிறேன். சட்டரீதியாக செல்கிறேன். பாடகியுடன் என்னை தொடர்புபடுத்தி பேசுவது, பேசியவர்களுக்குத்தான் அசிங்கம். அவர் ஒரு சைக்காலஜிஸ்ட். மன அழுத்தத்தில் இருந்த எத்தனையோ பேரை காப்பாற்றி இருக்கிறார். அவரோடு ஒரு ஆன்மிக மையம் ஆரம்பிக்க முடிவு செய்ததை தகர்ப்பதற்காக இப்படி பேசுகின்றனரா என்று தெரியவில்லை. அப்படி பேசுவது மிகவும் தவறு. நான் சட்டத்தை நம்புகிறேன். நியாயம் கிடைக்கும்,' என்றார்.

இந்நிலையில் ஜெயம் ரவி பேசிய வார்த்தையை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த பாடகி கெனிஷா அதற்கு நன்றி தெரிவித்ததுடன், 'நட்பிலும் அதீத அன்பு உண்டு… அதை மக்கள் மறந்துவிடுகின்றனர்' என்கிற வாசகத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

இருவரும் நட்புடன் இருப்பதைக் கூறினாலும் ரசிகர்கள் தொடர்ந்து பாடகி கெனிஷாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரையும் இணைத்துப் பேசி வருகின்றனர்.

View this post on Instagram

A post shared by Keneeshaa $ The Kings (@keneeshaaandthekings)

Original Article

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024