2
வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமின் காம்ரப் மெட்ரோ மாவட்டத்தில் வெப்ப அலை வாட்டி வதைக்கிறது. இதன் காரணமாக, பள்ளி செல்லும் குழந்தைகளின் உடல்நலன் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
காம்ரப் மெட்ரோ மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் பலர் நீர்ச்சத்து குறைபாடு உள்ளிட்ட உடல் உபாதைகளுக்கு ஆளாகியுள்ளதுடன் மயக்கமடைந்ததைத் தொடர்ந்து, காம்ரப் மெட்ரோ மாவட்டத்தில் செயல்படும் தனியார், அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்பட அனைத்து பள்ளிகளுக்கும் நாளை(செப்.24) முதல் செப்.27-ஆம் தேதி வரை விடுமுறை அளித்து அஸ்ஸாம் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
காம்ரப் மெட்ரோவில் வெப்ப அலையால் பாதிக்கப்பட்டு மாணவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.