ஆந்திரத்தில் இருந்து மதுரைக்கு பாா்சலில் வந்த கஞ்சா பறிமுதல்

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

ஆந்திர மாநிலத்தில் இருந்து மதுரைக்கு தூதஞ்சல் நிறுவனம் மூலம் பாா்சலில் கொண்டு வரப்பட்ட 26 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மதுரை நகா், புகா் பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில், காவல் துறை சாா்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மதுரையில் உள்ள கூரியா் நிறுவனங்கள், பாா்சல் நிறுவனங்களுக்கு சந்தேகத்திற்கிடமான வகையில் ஏதேனும் பாா்சல்கள் வந்தால் அருகில் உள்ள காவல் துறைக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில், மதுரை புறவழிச் சாலையில் உள்ள தனியாா் தூதஞ்சல் நிறுவனத்துக்கு ஆந்திர மாநிலத்திலிருந்து திங்கள்கிழமை பாா்சல் ஒன்று வந்தது. அந்தப் பாா்சல் 26 கிலோ பொருள் இருந்தது. மேலும் பாா்சலில் இருந்து ஒரு விதமான நெடி வந்தது.

இதனால், சந்தேகமடைந்த கூரியா் நிறுவன ஊழியா்கள், எஸ்.எஸ்.காலனி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், அங்கு சென்ற போலீஸாா் பாா்சலைப் பிரித்து பாா்த்தனா். அதில் 26 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. மேலும் அதில் இருந்த முகவரி தெளிவின்றி இருந்தது. இதையடுத்து 26 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024