ஜம்மு-காஷ்மீர் 2-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

by rajtamil
Published: Updated: 0 comment 3 views
A+A-
Reset

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் 26 தொகுதிகளுக்கான 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

கடும் குளிர் மற்றும் பனி இருந்தபோதிலும், ஆண்களும் பெண்களும் வரிசையில் நின்று வாக்களித்தனர்.

ஜம்மு-காஷ்மீர் 2-ஆம் கட்ட வாக்குப்பதிவில் மாலை 5 மணி நிலவரப்படி, 54 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்தது.

ஜம்மு பகுதியில் உள்ள ரியாசி, ரஜெளரி, பூஞ்ச், காஷ்மீா் பகுதியில் உள்ள ஸ்ரீநகா், புத்காம், கந்தா்பால் ஆகிய 6 மாவட்டங்களின் 26 தொகுதிகளில் இன்று இரண்டாம் கட்ட தோ்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது.

பிரதமர் மோடி மீண்டும் மன்னிப்பு கேட்க நேரிடும்: ராகுல் காந்தி

வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பை மேம்படுத்தி பாதுகாப்பை அதிகரிக்கும் விதமாக காவல் துறை, ஆயுதக் காவல்படை, மத்திய ஆயுத துணை ராணுவப் படைகளை சோ்ந்த அதிகாரிகள் நிலைநிறுத்தப்பட்டு இருந்தனர்.

ஜம்மு-காஷ்மீா் பேரவைக்கான மூன்றாம் மற்றும் இறுதிகட்ட தோ்தல் அக்டோபா் 1-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதன்பிறகு, அக்டோபா் 8-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்படவுள்ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024