‘செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்திருப்பது ஆறுதல் அளிக்கிறது’ – முத்தரசன்

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்திருப்பது ஆறுதல் அளிக்கிறது என முத்தரசன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பண மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியுள்ளது. இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"செந்தில் பாலாஜியை ஜாமீனில் விடுவித்திருப்பதற்கு வரவேற்பு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை, சுப்ரீம் கோர்ட்டு பிணையில் விடுவித்து இருக்கிறது. அவர் மீது வலிந்து சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு விசாரணை நிலையில் இருக்கும் போதே 15 மாத காலம் சிறை வைக்கப்பட்டு இருக்கிறார்.

எதிர்க்கட்சிகளை முடக்கி வைப்பதற்கு பா.ஜ.க. அரசு எந்த எல்லைக்கும் செல்லும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. குறிப்பாக தேர்தல் நேரங்களில், களப்பணிகளில் சிறப்பாக செயல்படும் எதிர்க்கட்சிகளின் தலைவர்களை, மக்களிடமிருந்து பிரித்து ஒதுக்கி தனிமைப்படுத்த ஏதேனும் குற்றம் சுமத்தி சிறையில் அடைப்பதை பா.ஜ.க. ஒரு உத்தியாகவே கையாண்டு வருகிறது.

அரசியலமைப்புச் சட்டப்படி, ஆட்சி நிர்வாகம் சரியாக நடக்கிறதா என்பதை கண்காணிக்க, சுயேச்சையான ஜனநாயக நிறுவனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையம், புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை, நீதிமன்றங்கள் உள்ளிட்ட இந்த அமைப்புகளை முடக்கி பா.ஜ.க. அரசு தனதாக்கிக் கொண்டது.

எனவேதான் பிணையில் கூட வெளிவர முடியாமல் அமைச்சராக இருந்த அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இப்போதாவது பிணை கிடைத்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. பிணையில் விடுவிக்க சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது."

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

You may also like

© RajTamil Network – 2024