தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இயல்பைவிட 18% கூடுதல்!

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இயல்பைவிட இந்தாண்டு 18 சதவீதம் கூடுதலாகப் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை 4 மாதங்கள் வரை பெய்யும். தென்மேற்கு பருவ மழையின் மூலம் தமிழகத்தின் கன்னியாகுமரி, தேனி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்கள் மழை பொழிவை பெறுகின்றன.

படிக்க: பாஜகவில் உள்கட்சி பூசல் இல்லை: ஹரியாணா முதல்வர்!

இந்த நிலையில் நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை பெய்துவருகின்றன. கேரளத்தில் மட்டுமின்றி தமிழகத்திலும் தென்மேற்கு பருவமழை பரவலாகப் பெய்து வருகின்றது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் கூறுவது..

தமிழகத்தில் ஜூன் 1 முதல் செப்.30 வரை தமிழகத்தில் பெய்ய வேண்டிய மழையின் அளவு 389.3 மி.மீ ஆகும். இயல்பாக 328.5 மி.மீ வரை மழைப் பதிவாகும். இந்தாண்டு பெய்த மழையின் அளவு 39 செ.மீ அதாவது இயல்பை விட 18 சதவீதம் அதிகரித்துள்ளது.

படிக்க: ரூபாய் தாளில் காந்திக்கு பதில் நடிகர் அனுபம் கெர்… குஜராத் கும்பல் கைது!

அந்தவகையில் நெல்லையில் 92.5 இயல்பு மழையை விட அதிகபட்சமாக 265 சதவீதம் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக நாகையில் இயல்பு மழை 246.6 மி.மீட்டரிலிருந்து 50 சதவீதம் குறைவாகப் பதிவாகியுள்ளது.

தமிழகத்தைப் பொருத்தவரை இன்று 12 மாவட்டங்களிலும், நாளை 7 மாவட்டங்களிலும், நாளை மறுநாள் 9 மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024