மோட்டார் வாகன விதிகளை மீறியதாக 1.82 லட்சம் பேரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய ஆர்டிஓ-வுக்கு பரிந்துரை

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

மோட்டார் வாகன விதிகளை மீறியதாக 1.82 லட்சம் பேரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய ஆர்டிஓ-வுக்கு பரிந்துரை

சென்னை: மோட்டார் வாகன விதிகளை மீறிய 1 லட்சத்து 82,375 பேரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய ஆர்டிஓ-வுக்கு பரிந்துரை செய்யப் பட்டிருப்பதாக தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் நடப்பு ஆண்டு ஜூலை மாதம் வரை 10,066 விபத்து வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. இந்த விபத்துக்களில் 10,536 பேர் உயிரிழந்தனர். கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் வரை 10,589விபத்துக்களில் 11,106 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

5 சதவீத உயிரிழப்பு தடுப்பு: தமிழக காவல்துறையின் விழிப் புணர்வு உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளின் காரணமாக 5 சதவீத உயிரிழப்புகள் தடுக்கப்பட்டி ருக்கிறது.

இதேபோல், நடப்பு ஆண்டு ஜூலை மாதம் வரை, அதிக வேகத்தில் வாகனம் ஓட்டியதாக1 லட்சத்து 5,097 வழக்குகளும், சிக்னலில் நிற்காமல் சென்றதாக1 லட்சத்து 35,771 வழக்குகளும், வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தியதாக 2 லட்சத்து 31,624 வழக்குகளும், மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக 1 லட்சத்து 13,270 வழக்குகளும் அதிக பாரம்ஏற்றி வந்ததாக 6,946 வழக்குகளும் சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றி சென்றதாக 74,013 வழக்குகளும் என மொத்தம் 6 லட்சத்து 66,721 வழக்குகள் பதிவாகின. மேலும், தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியதாக 35 லட்சத்து 78,763 வழக்குகள், சீட் பெல்ட் அணியாமல் ஓட்டியதாக 3 லட்சத்து 39,434 வழக்குகள் எனமொத்தம் 39 லட்சத்து 18,197 வழக்குகள் பதிவாகி உள்ளன.

மேலும், மோட்டார் வாகன சட்டத்தை மீறியதற்காக 35 லட்சத்து78,763 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேநேரத்தில் மோட்டார் வாகன விதிகளை மீறிய 1 லட்சத்து 82,375 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அலுவலருக்கு (ஆர்டிஓ) பரிந்துரைகள் அனுப்பப்பட்டுள்ளன. 39,924 எண்ணிக்கையி லான ஓட்டுநர் உரிமம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024