‘இந்த தேர்தல் ஜம்மு-காஷ்மீரின் சுயமரியாதை’ – ராகுல் காந்தி

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

இந்த தேர்தல் ஜம்மு-காஷ்மீரின் சுயமரியாதை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் மூன்றாவது மற்றும் இறுதிக் கட்டத் தோ்தல் இன்று(அக்.1) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

40 தொகுதிகளில் நடைபெறும் இந்த தோ்தலில் முன்னாள் துணை முதல்வா்கள் தாரா சந்த் மற்றும் முஸாஃபா் பெக் உள்பட 415 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். தோ்தலை நடத்தும் பணியில் 20,000 தோ்தல் பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனர். இன்று மாலை 6 மணிவரை வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

இதையும் படிக்க | ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ – 3 சட்ட முன்வரைவுகளைக் கொண்டுவர முடிவு! சாத்தியமா?

இதையடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில்,

'ஜம்மு காஷ்மீரில் இன்று மூன்றாவது மற்றும் கடைசி கட்டத் தேர்தல் நடைபெறுகிறது.

இந்த தேர்தல் என்பது ஜம்மு-காஷ்மீரின் சுயமரியாதை மற்றும் இந்த மக்களின் உரிமைகள் பற்றியது என்பதை நினைவில்கொள்ளுங்கள்.

அனைத்து வாக்காளர்களும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து இந்தியாவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இந்தியாவுக்கான உங்களுடைய ஒவ்வொரு வாக்கும் ஜம்மு-காஷ்மீரின் எதிர்காலத்துக்கான அடித்தளத்தை பாதுகாக்கும், உரிமைகளுக்காக போராடுவதற்கான வலிமையை உங்களுக்கு வழங்கும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

जम्मू-कश्मीर में आज तीसरे और आखिरी चरण का चुनाव है।
याद रखें, ये चुनाव प्रदेश के स्वाभिमान का चुनाव है, प्रदेशवासियों के अधिकारों का चुनाव है।
सभी मतदाताओं से अनुरोध है – बड़ी संख्या में अपने घरों से बाहर निकल कर INDIA को वोट करें।
INDIA को दिया आपका हर वोट, जम्मू-कश्मीर के…

— Rahul Gandhi (@RahulGandhi) October 1, 2024

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டமாக தோ்தல் அறிவிக்கப்பட்டது. கடந்த 18-ஆம் தேதி நடைபெற்ற முதல் கட்டத் தோ்தலில் (24 தொகுதிகள்) 61.38 சதவீதமும், கடந்த 25-ஆம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்டத் தோ்தலில் (26 தொகுதிகள்) 57.31 சதவீத வாக்குகளும் பதிவாகின.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370, கடந்த 2019-இல் ரத்து செய்யப்பட்டு, இரு யூனியன் பிரதேசங்களாக (ஜம்மு-காஷ்மீா், லடாக்) பிரிக்கப்பட்ட பின்னா் நடைபெறும் முதல் தோ்தல் என்பதால் நாடு முழுவதும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024